Posts

உயர்ந்த கனவு

2019 வருட பிற்பகுதியில் ஒரு நாள்.. ஒரு வேற்றுமொழி திரைப்படத்தை தேர்ந்தெடுத்து, கதையின் நாயகிக்காக பார்த்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தாலும் தன்னுடன் சேர்ந்து என் மகனும் அதை பார்க்கலாமா என்ற சந்தேகத்தை தீர்க்க அதன் முன்னோட்டத்தை பார்த்தேன். அதை குழந்தையுடன் சேர்ந்து பார்ப்பதில் எந்த ஐயமுமில்லை என்ற தீர்மானத்திற்கு பிறகு படத்தை குடும்பாக உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தோம் (In Netflix) நான், மனைவி மற்றும் மூத்த மகன். படத்தில் சாகச காட்சிகளோ, குழந்தைகள் குதூகலிக்க குத்து பாடல்களோ, குழந்தைள் அவர்களாக பயந்து கண்ணை மூடிக்கொள்ளும் அமானுஷ்ய காட்சிகளோ, அல்லது பெற்றோர்கள் பயந்து அவர்கள் கண்ணை முட முயற்சி செய்யும் விதமான ஆபாச காட்சிகள் ஏதும் இல்லாத ஒரு படம். படம் ஆரம்பம் முதல் ஒரு வித பாஸிடிவ் எனர்ஜியை தருவது போலவே ஒரு உணர்வு.  படம் முடியும் வரை 6 வயது பையன் (அன்றைய வயது)எந்த வித இடையூறு செய்யாமலும், விளையாடாமலும் பார்த்தான். சொற்ப தமிழ் படங்களை அவன் இவ்வாறு அமைதியாக பார்த்திருந்தாலும் வேற்று மொழி படத்தை அது போல பார்த்தது எனக்கு சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது அன்று.  படத்தின் கதை என்னவென்று பார்த

அழுகையும் சிரிப்பும்...

அழுதுகொண்டே சிரிக்கும் தருணம்தான் எவ்வளவு அழகானது,.. எவ்வளவு ஆழமானது...!!! வாழ்க்கையே அழுவதில்தானே ஆரம்பமாகிறது, அந்த அழுகை தொப்புள்கொடி அறுத்த வலியோ, தாயின் இருட்டிலிருந்து வந்த பிரிவோ என்பதை விட நாம் உயிரோடிருப்பதற்கு சான்றாவதே நிதர்சனம். கனவோ, காதலோ, நட்போ, குடும்பமோ கண்டிப்பாக நாம் அனைவரும் இதுபோல் ஒரு தருணத்தை கடத்திருப்போம். முதல்வரியை படித்தவுடன் நா.முத்துகுமாரின் இந்த வரிகளை உதடுகள் உச்சரிக்கிறதா?? "சிரிப்பு வரும், அழுகை வரும், காதலில் இரண்டுமே கலந்துவரும்" ஆம் ஆனால் அந்த காதல் தன் எதிர்பாலினத்தவரிடம் மட்டும்தான் என்று ஏதும் விதியிருக்கிறதா என்ன? எனக்கு நினைவில் இருக்கும் சில தருணத்தில் மறக்கமுடியாத ஒன்று, பள்ளிப்பருவத்தில் நடந்தது. ஆண்டு விடுமுறையில், தமுக்கம் மைதானத்தில் நடக்கும் சித்திரை பொருட்காட்சியில் நானும் சில நண்பர்களும் மாலை நேர வேலைக்கு செல்வோம். ஏன் அந்த வேலைக்கு சென்றேன் என்பதற்கு காரணம் இருந்தாலும் பிறகு அது ஆண்டாண்டு வழக்கமானது வேறு கதை. அதற்குமுன் என்னதான் வீட்டுக்கு மிக அருகாமையில் இருந்தாலும் இரண்டு மாதம் நடக்கும் பொருட்காட்சிக்கு ஒரு நாள் மட்டுமே

அழையா ஒர் அழைப்பு

நேற்று அலுவலகம் முடிந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த போது பேசி ரொம்ப நாள் ஆன ஒரு நண்பருக்கு தொலைபேசியில் அழைத்து பேசினேன். நாங்க அடிக்கடி பேச மாட்டோம், அதே சமயம் என்றோ ஒரு தடவை பேசும்போது எப்படியும் 60 நிமிடங்களுக்கு குறைவாக முடிக்க மாட்டோம்.  100 நிமிடங்கள் வரை போன தொலைபேசி அழைப்புகளெல்லாம் கூட உண்டு, ஆனால் நேற்று எவன் கண்ணு பட்டது என தெரியவில்லை, பத்து நிமிடத்தில் முடித்துவிட்டோம். அதற்கடுத்து வெறுமென சாலையை வெறிச்சு பார்த்து 1 மணி நேரத்தில் இறங்கும் இடம் வந்தது.  அவனுடன் பேசியதை அசைபோட்டுக்கொண்டே இறங்கி வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தேன், அப்போது ஒரு யோசனை, நமது குடும்ப நபர்கள் தவிர்த்து, அலுவலக அழைப்பு தவிர்த்து அல்லது ஏதோ ஒரு சேவை நிறுவனத்தில் இருந்து வரும் அழைப்புகளை தவிர்த்து நமக்கு எத்தனை அழைப்பு வெறும் நல விசாரிப்பாக வருகிறது? என்பதுதான். சொந்த மண்ணில் இருக்கும் போது இது மாதிரி அழைப்புகள் வந்திருக்கலாம், இங்கு வெளிநாட்டில் இருப்பதனாலோ என்னவோ, சற்று ஆழமாக சிந்திக்க வைத்துவிட்டது. ஏன், நான் அழைத்த அந்த நண்பனே என்னை அழைத்து பேசினால் அபூர்வம்தான். இங்கு இருக்கும் ஒரு முகப்புத்தக நண்பர